29 December 2010

கோள்களும் அவற்றின் தன்மைகளும் - வியாழன்.

வியாழன்.





சோதிடவியலில் ஐந்தாவது கோளான வியாழனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.


அந்தணன், அமைச்சன்,அரசன்,ஆசான்,ஆண்டனப்பான் ,குரு, சிகண்டிசன்,
சீவன், சுருகுறா,தாரபதி,தெய்வமந்திரி,நற்கோள் , பிரகற்பதி, வீதகன், பொன்,
மறையோன், வேதன், வேந்தன் ஆகியனவாகும்.

உரிய பால் : ஆண் கிரகம்.

உரிய நிறம் : மஞ்சள் நிறம் (பொன்னிறம்).

உரிய இனம் : பிராமண இனம்.

உரிய வடிவம் : உயரம்.

உரிய அவயம் : இருதயம்.

உரிய உலோகம் : பொன்.

உரிய மொழி : தெலுங்கு, கன்னடம்,மலையாளம்.

உரிய ரத்தினம் : புஷ்பராகம்.

உரிய ஆடை : பொன்னிற ஆடை.

உரிய மலர் : முல்லை.

உரிய தூபம் : ஆம்பல்.

உரிய வாகனம் : யானை.

உரிய சமித்து : அரசு.

உரிய சுவை : தித்திப்பு.

உரிய தான்யம் : கொத்துக்கடலை.

உரிய பஞ்ச பூதம் : தேயு.

உரிய நாடி : வாத நாடி.

உரிய திக்கு : வடகிழக்கு( ஈசான்யம் ).

உரிய அதி தேவதை : பிரம்மா, தட்சிணாமூர்த்தி.

உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) :
உபயக் கோள்.

உரிய குணம் : சாந்தம்.

உரிய ஆசன வடிவம் :
செவ்வகம்.

உரிய தேசம் : சிந்து.

நட்புப் பெற்ற கோள்கள் :
சூரியன், சந்திரன், செவ்வாய்.

பகைப் பெற்ற கோள்கள் :
புதன், சுக்கிரன்.

சமனான நிலை கொண்ட கோள்கள் :
சனி, ராகு, கேது.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒருவருடம்.

உரிய தெசா புத்திக் காலம் : பதினாறு ஆண்டுகள்.

வியாழனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3,6,8,12ல் இருந்தால் மறைவு.

நட்பு வீடு : சிம்மம், கன்னி, ரிஷபம், மிதுனம், துலாம், கும்பம்.

பகை வீடு : மேஷம், விருச்சிகம்.

ஆட்சி பெற்ற இடம் : தனுசு, மீனம்.

நீசம் பெற்ற இடம் : மகரம்.

உச்சம் பெற்ற இடம் : கடகம்.

மூலதிரி கோணம் : தனுசு.

உரிய உப கிரகம் : எமகண்டன்.

உரிய காரகத்துவம் : புத்திர காரகன்.

புத்திரர், பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், அச்சாரியத்துவம், அட்டமா சித்திகள், அரச சேவை, இராச சன்மானம், சொர்ணம், தேன், கடலை, புத்தியுக்தி, இவைகளுக்கு எல்லாம் வியாழன் தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)..

"குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா
க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி"

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..

"தேவாநாஞ்ச ரிஷீணாஞ்ச
குரும் காஞ்சன ஸநிபம்|
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்||"

வியாழன் காயத்ரி..

"ஓம் வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்||"


20 December 2010

கோள்களும் அவற்றின் தன்மைகளும் - புதன்.

புதன்.



சோதிடவியலில் நான்காவது கோளாய் கருதப் படும் புதனுக்கு பல்வேறு தமிழ் பெயர்கள் வழங்கப் படுகிறது.

அநூரு, அருணன், அனுவழி, கணக்கன், சௌமன், சலமன், சிந்தை, சூரியன், சௌமியன், துவன், தேர்ப்பாகன், நற்க்கொள், நிபுணன், பச்சை, பண்டதன், பாகன், புந்தி, புலவன், மதிமகன், மாலவன், மால்மேதை ஆகியனவாகும்.

உரிய பால் : அலி கிரகம்.

உரிய நிறம் : பச்சை நிறம்.

உரிய இனம் : வைசிய இனம்.

உரிய வடிவம் : உயரம்.

உரிய அவயம் : கழுத்து.

உரிய உலோகம் : பித்தளை.

உரிய மொழி : தமிழ், கணிதம், சிற்பம், ஜோதிடம்.

உரிய ரத்தினம் :
மரகதம்.

உரிய ஆடை :
நல்ல பச்சை நிற ஆடை.

உரிய மலர் :
வெண்காந்தள்.

உரிய தூபம் : கற்பூரம்.

உரிய வாகனம் :
குதிரை, நரி.

உரிய சமித்து :
நாயுருவி.

உரிய சுவை : உவர்ப்பு.

உரிய பஞ்ச பூதம் :
வாயு.

உரிய நாடி : பித்த நாடி.

உரிய திக்கு : வடக்கு.

உரிய அதி தேவதை : விஷ்ணு.

உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.

உரிய குணம் : தாமசம்.

உரிய ஆசன வடிவம் : அம்பு.

உரிய தேசம் : மகதம்.

நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், சுக்கிரன்.

பகைப் பெற்ற கோள் :
சந்திரன்.

சமனான நிலை கொண்ட கோள்கள் :
செவ்வாய், வியாழன்,சனி, இராகு, கேது.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒருமாதம்.

உரிய தெசா புத்திக் காலம் : பதினேழு ஆண்டுகள்.

புதனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3, 6, 8, 12ல் இருந்தால் மறைவு.

நட்பு வீடு :
ரிஷபம், சிம்மம், துலாம்.

பகை வீடு : கடகம், விருச்சிகம்.

ஆட்சி பெற்ற இடம் : மிதுனம், கன்னி.

நீசம் பெற்ற இடம் : மீனம்.

உச்சம் பெற்ற இடம் : கன்னி.

மூலதிரி கோணம் : கன்னி.

உரிய உப கிரகம் :
அர்த்தப்பிரகரணன்.

உரிய காரகத்துவம் : மாதுல காரகன்.

கல்வி, ஞானம், தனாதிபதி, தூதுவன், சங்கீதம், வாக்கு சாதுர்யம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத்தொழில், வியாபாரங்கள், புத்திரக் குறைவு, வாத நோய், விஷரோகம் இவைகளுகு எல்லாம் புதன் தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)..

"இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
புதந்தந்து ஆள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி போற்றி"

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..

"பிரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்|
ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம்யகம்||"

புதன் காயத்ரி..

"ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்||"

15 December 2010

கோள்களும் அவற்றின் தன்மைகளும் - செவ்வாய்.



செவ்வாய்.



சோதிடவியலில் மூன்றாவது கோளான செவ்வாய்க்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப் படுகிறது.

அரத்தன், அழலோன், அழல், அறிவன், ஆரல், உதிரன், குசன், குருதி, செந்தி, வண்ணன், சேய், நிலமகள், பௌமன், மங்கலன், வக்கிரன் ஆகியனவாகும்.

உரிய பால் : ஆண் கிரகம்.

உரிய நிறம் : சிவப்பு நிறம்.

உரிய இனம் : சத்திரிய இனம்.

உரிய வடிவம் : குள்ள மான உயரம்.

உரிய அவயம் : கை, தோள்.

உரிய உலோகம் : செம்பு.

உரிய மொழி : தெலுங்கு, தமிழ்.

உரிய ரத்தினம் : பவளம்.

உரிய ஆடை : நல்ல சிவப்பு (பவள நிறம்) நிற ஆடை.

உரிய மலர் : செண்பகம்.

உரிய தூபம் : குங்கிலியம்.

உரிய வாகனம் : செம்போத்து, சேவல்.

உரிய சமித்து : கருங்காலி.

உரிய சுவை : உறைப்பு.

உரிய பஞ்ச பூதம் : பிருதிவி.

உரிய நாடி : பித்த நாடி.

உரிய திக்கு : தெற்கு.

உரிய அதி தேவதை : சுப்ரமண்யர்.

உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.

உரிய குணம் : ராசஜம்.

உரிய ஆசன வடிவம் : முக்கோணம்.

உரிய தேசம் : அவந்தி.

நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், வியாழன்.

பகைப் பெற்ற கோள்கள் : புதன், இராகு, கேது.

சமனான நிலை கொண்ட கோள்கள் : சனி, சுக்கிரன்.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை மாதங்கள்.

உரிய தெசா புத்திக் காலம் : ஏழு ஆண்டுகள்.

செவ்வாயின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.

நட்பு வீடு : சிம்மம், தனுசு, மீனம்.

பகை வீடு : மிதுனம், கன்னி.

ஆட்சி பெற்ற இடம் : மேஷம், விருச்சிகம்.

நீசம் பெற்ற இடம் : கடகம்.

உச்சம் பெற்ற இடம் : மகரம்.

மூலதிரி கோணம் : மேஷம்.

உரிய உப கிரகம் : தூமன்.

உரிய காரகத்துவம் : பிராத்ருக் காரகன்.

சகோதரன், பூமி, சுப்பிரமணியர், கோபம், குயவன், யுத்தம், இரத்தம், செம்பு, பவளம், அக்கினிபயம், கடன், உற்சாகம், அதிகாரம், அடுதி மரணம் இவைகளுகு எல்லாம் செவ்வாய் தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)..

"சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாத ருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்குவாய் போற்றி போற்றி"

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..

"தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரபம்|
குமாரம் ஸக்திஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம்யகம்||"

செவ்வாய் காயத்ரி..

"ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம: ப்ரசோதயாத்||"

05 December 2010

கோள்களும் அவற்றின் தன்மைகளும் - சந்திரன்

சந்திரன்.


சோதிடவியலில் இரண்டாவது கோளான சந்திரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.

அமுக்கதிரோன், அமுதகிரணன், அம்புலி, அரி, அரிச் , அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன், இராக்கதிர், இவன், உடுபதி, உகுவின்வேந்தன், கலாநிதி, கலையினன், களங்கள், குபேரன், குமுதநண்பன், குரங்கி, சசி, சீதன், சுதாகரன், சோமன், தண்சுடர், கண்ணவன்,தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நிராசரன், நிசாபதி, நிலவு, பசுங்கதிர், மதி, மதியம், மனேந்தி, முயலின் கூடு, விது, விபத்து, வெண்கதிரோன், வேந்தன் ஆகியனவாகும்.

உரிய பால் : பெண் கிரகம்.

உரிய நிறம் : வெண்மை நிறம்.

உரிய இனம் : வைசிய இனம்.

உரிய வடிவம் : குள்ள மான உயரம்.

உரிய அவயம் : முகம், வயிறு.

உரிய உலோகம் : ஈயம்.

உரிய மொழி : இல்லை.

உரிய ரத்தினம் :
முத்து.

உரிய ஆடை : வெண்மை (முத்து வெண்மை) நிற ஆடை.

உரிய மலர் : வெள்ளை அலரி.

உரிய தூபம் : சாம்பிராணி.

உரிய வாகனம் : முத்து விமானம்.

உரிய சமித்து :
முருக்கு.

உரிய சுவை :
உப்பு.

உரிய பஞ்ச பூதம் : அப்பு.

உரிய நாடி : சிலேத்தும நாடி.

உரிய திக்கு : வடமேற்கு.

உரிய அதி தேவதை : பார்வதி.

உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.

உரிய குணம் : வளர் பிறையில் சாந்தம், தேய்பிறையில் கொடூரம்.

உரிய ஆசன வடிவம் : சதுரம்.

உரிய தேசம் : யமுனா.

நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், புதன்.

பகைப் பெற்ற கோள்கள் : இராகு, கேது.

சமனான நிலை கொண்ட கோள்கள் : செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன்.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் இரெண்டேகால் நட்சத்திர அளவு.

உரிய தெசா புத்திக் காலம் :
பத்து ஆண்டுகள்.

சந்திரனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3,6,8,12ல் இருந்தால் மறைவு.

நட்பு வீடு : மிதுனம், சிம்மம், கன்னி.

பகை வீடு : எல்லா வீடுகளும் நட்பு ( பகைவீடு கிடையாது).

ஆட்சி பெற்ற இடம் : கடகம்.

நீசம் பெற்ற இடம் : விருச்சிகம்.

உச்சம் பெற்ற இடம் : ரிஷபம்.

மூலதிரி கோணம் : ரிஷபம்.

உரிய உப கிரகம் : பரிவேடன்.

உரிய காரகத்துவம் : மாத்ரு காரகன்.

மேலும் பராசக்தி, கணபதி, சுகபோசனம், வஸ்திரம், நித்திரை, சித்த சுவாதீனமின்மை, சயரோகம், சீதளநோய்கள், இடக்கண், புருவம், குடை, உத்தியோகம், கீர்த்தி, முத்து, வெண்கலம், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம், சாமரம் , பலம், ஸ்நானாதிகம் இவைகளுக்கு எல்லம் சந்திரன் தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)..

"எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி போற்றி"

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..

"ததிஸங்க துஷாராபம்
க்ஷீரோதார்ணவ ஸம்பவம்|
நமாமி ஸஸிநம் ஸோமம்
ஸம்போர் மகுட பூஷணம்||"

சந்திர காயத்ரி..

"ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||"

29 November 2010

கோள்களும் அவற்றின் தன்மைகளும் - சூரியன்..

சோதிடவியல் கோள்களின் நகர்வுகளை வைத்தே தீர்மானிக்கப் படுகிறது. நவீன அறிவியல் வசதிகள் ஏதுமில்லாத ஒரு காலத்திலேயே நமது முன்னோர்கள் கோள்களைப் பற்றியும் அவற்றின் குணாதிசயங்களைப் பற்றியும் அவற்றின் பாதிப்புகள் குறித்தும் அறிந்து தெளிந்து அருளியிருக்கின்றனர்.

அத்தகைய தெளிவுகளில் இருந்து ஒவ்வொரு கோளின் தன்மைகளை பட்டியலிடும் முயற்சியில், தலைமைக் கோளான சூரியன் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.

சூரியன்.



சூரிய குடும்பத்தின் முதன்மை கோளான சூரியனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.

அண்டயோனி, அரி, அரியமா, அருக்கன், அருணன், அலரி, அழரவன், அனலி, ஆதவன், ஆதவன், ஆயிரஞ்சோதி, இதவு, இருள்வலி, இனன், உதயம், எல், எல்லை, எல்லோன், என்றுள், எழ்ப்ரியோன் , ஒளி, ஒளியோன் , கதிரவன், கனவி, கிரணமாலி, சண்டன், சவிதா, சான்றோன், சித்ரபானு, சுடரோன், சூரன், செங்கதிரோன் , சோதி, ஞாயிறு ,தபணன், தரணி, திவாகரன், தினகரன், தனமணி, நாபாமணி, பகலோன், பகல், பங்கயன், பதங்கன், பரிகி, பர்க்கன், பனிப்பகை, பானு, மார்த்தாண்டன், மித்திரன், விசுரத்தனன், விண்மனி, விரிச்சிகன் , விரோசனன் , வெஞ்சுடர், வெயில், வேய்யோன் ஆகியனவாகும்.

உரிய பால் : ஆண் கிரகம்.

உரிய நிறம் : வெண்மை நிறம்.

உரிய இனம் : சத்திரிய இனம்.

உரிய வடிவம் : சம உயரம்.

உரிய அவயம் : தலை.

உரிய உலோகம் : தாமிரம்.

உரிய மொழி : சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளாம்.

உரிய ரத்தினம் : மாணிக்கம்.

உரிய ஆடை : சிவப்பு (இரத்த சிவப்பு) நிற ஆடை.

உரிய மலர் : செந்தாமரை.

உரிய தூபம் : சந்தனம்.

உரிய வாகனம் : மயில், தேர்.

உரிய சமித்து : எருக்கு.

உரிய சுவை : துவர்ப்பு.

உரிய பஞ்ச பூதம் : தேயு.

உரிய நாடி : பித்த நாடி.

உரிய திக்கு : கிழக்கு.

உரிய அதி தேவதை : சிவன்.

உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : நிலையான கோள்.

உரிய குணம் : மந்தம்(தாமஸ்ம்).

உரிய ஆசன வடிவம் : வட்டம்.

உரிய தேசம் : கலிங்கம்.

நட்புப் பெற்ற கோள்கள் : சந்திரன், வியாழன், செவ்வாய்.

பகைப் பெற்ற கோள்கள் : சுக்கிரன், சனி, ராகு, கேது.

சமனான நிலை கொண்ட கோள் : புதன்.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம்.

உரிய தெசா புத்திக் கா லம்: ஆறு ஆண்டுகள்.

சூரியனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 8,12ல் இருந்தால் மறைவு.

நட்பு வீடு : விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்.

பகை வீடு : ரிஷபம், மகரம், கும்பம்.

ஆட்சி பெற்ற இடம் : சிம்மம்.

நீசம் பெற்ற இடம் : துலாம்.

உச்சம் பெற்ற இடம் : மேடம்.

மூலதிரி கோணம் : சிம்மம்.

உரிய உப கிரகம் : காலன்.

உரிய காரகத்துவம் : சூரியன் பித்ருகாரகன்.

மேலும் பிதா, ஆத்மா, சிராசு, தந்தம், வலது நேத்ரம், பித்தம், ஒருதலை நோவு போன்ற சிரசு ரோகங்கள், சித்தசுவாதீனம், சௌரியம், பிரதாபம், தைரியம், இராஜசேவை, அரச உத்தியோகம், யாத்திரை, கிராம சஞ்சாரம், இரசவாதம், யானை, மலை, காடு, தபசு, சைவானுஷ்டானம் இவைகளுக்கு எல்லாம் சூரியன்தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்).

"சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள்
களைவாய் போற்றி போற்றி"

தியான சுலோகம் (சமஸ்கிருதம்).

"ஜபாகுஸும ஸங்காஷம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்|
தமோரிம் ஸர்வ பாபக்நம்
ப்ரணதோஸ்மி திவாகரம்||"

சூர்ய காயத்ரி.

"ஓம் அச்வ த்வஜாய வித்மஹே; பாசஹஸ்தாய தீமஹி
தன்நோ ஸூர்ய: ப்ரசோதயாத்||"

"ஓம் பாஸ்கராய வித்மஹே; மஹத்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்||"

11 November 2010

குரு பெயர்கிறார்...

குரு பகவான் 11.11.2010 அன்று அதி காலை 1 மணி அளவில் மீனராசியில் இருந்து கும்பராசிக்கு வக்கிர கதியில் இடம் பெயர்கிறார். இவர் மீண்டும் 22.11.2010 அன்று காலை 7 மணி அளவில் கும்ப ராசியில் இருந்து மீண்டும் மீன ராசிக்கே இடம் பெயர்கிறார் இந்த இடைப்பட்ட கால அளவில் எந்த ராசிக்கும் பெரிதாக நன்மையோ தீமையோ ஏற்பட வாய்ப்பில்லை.


08 November 2010

ஜோதிடம் - வகைகள்..!

ஜோதிடம் என்றால், கோள்களின் நகர்வுகள் அவற்றின் ஊடாக அமையப் பெற்ற ராசி மண்டலங்கள், அதில் உள்ளடங்கி இருக்கு நட்சத்திரங்கள் என்பதன் அறிவியலாக மட்டுமே பொதுவில் அறியப் பட்டிருக்கிறது. உண்மையில் ஜோதிடம் என்பது பல்வேறு முறைகளையும், வகைகளையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பு என்பதே சரியாகும்.

ஜோதிட இயலில் சித்தர்களின் பங்களிப்பு அளப்பறியது. அவர்கள் வகுத்தளித்த பல முறைகள் முற்றிலுமாகவே நமக்கு கிடைக்கவில்லை. சிலவற்றின் பெயர்கள் மட்டுமே காணக் கிடைக்கிறது. இழந்தவற்றைப் பற்றி கவலைப் படுவதைக் காட்டிலும், நமக்கு கிடைத்தவற்றை, குருவருளினால் மேலும் ஆக்கப் பூர்வமாய் பயன்படுத்திக் கொள்ள முனைவதே இந்த பதிவுகளின் நோக்கம்.

நம்மிடம் இருக்கும் சித்தர்களின் பாடற் தொகுப்பில் இருந்து நமக்கு ஆறு வகையான ஜோதிட முறைகள் கிடைத்திருக்கின்றன.


சோதிட சாத்திரம்.
இவை எல்லாமே வானில் உள்ள கோள்களின் அமைப்பு மற்றும் கோளின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.

பஞ்ச பட்சி சாத்திரம்.
ஐந்து வகையான பறவை இனங்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.

மனையடி சாத்திரம்.
வீடு, கட்டடங்கள், விவசாய நிலங்களின் தன்மைகளையும் அவற்றை தக்க வகையில் அமைத்துப் பயன்படுத்தும் முறைகளை கணிக்கும் முறை.

விருட்ச சாத்திரம்.
குறிப்பிட்ட மரங்களை வளர்ப்பதன் மூலம் வளர்ப்பவருக்கு கிடைக்கும் நன்மைகளையும், மரத்தின் தன்மைகளையும் கொண்டு கணிக்கும் முறை.

உடற் சாத்திரம்.
மனிதனின் உடலில் உள்ள அவயங்களின் அமைப்பு, அளவுகள், தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.

ஆரூடம்
செய்யப் போகும் காரியம், அல்லது குறிப்பிட்ட செயலின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை முன் கூட்டியே கணிக்கும் முறை.


இந்த அனத்துமே மனித சமூகத்தின் நலனை முன்வைத்தே கணிக்கப்படுகிறது. இந்த முறைகளில் கணிக்கப் படும் கணிப்புகள் தவறாகாது என்று சித்தர் பாடல்களில் காணப் படுகிறது. மேலும் இந்த கலைகள் தீயவர்கள் கைக்கு சென்றுவிடக் கூடாது என்பதிலும் சித்தர்கள் உறுதியாக இருந்ததும் தெரிகிறது.

இனிவரும் பதிவுகளில் இந்த முறைகளையும், அவற்றின் வகைகளையும் அதன் கூறுகளைப் பற்றி நானறிந்த வகையில் விளக்கிட முயற்சிக்கிறேன்.

பின்குறிப்பு: நாடி சோதிடம் பற்றிய எனது பதிவின் இணைப்பு இங்கே காணக் கிடைக்கும். விரைவில் இங்கே அதனை மீள் பதிவாக்குகிறேன்...


02 November 2010

ஜோதிடம்..?

பெருவெளியில் அமைந்திருக்கும் சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் தனித்துவமான விட்டம், இயல்பு, ஆற்றலைக் கொண்டவை என்பதை தற்கால அறிவியல் ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறது. இதில் பூமியில் மட்டுமே உயிரிங்கள் வாழும் சூழல் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தற்போதைய அறிவியல் ஆய்வு வசதிகள் ஏதுமில்லாத ஓர் கால கட்டத்தில் நமது முன்னோர்கள் ஒன்பது கோள்களையும் அவற்றின் குணாதிசியங்களையும், அவற்றின் நகர்வுகளையும் அவதானித்து குறித்து வைத்தனர். இந்த கோள்களின் நகர்வுகள், சேர்க்கைகள், ஒன்று மற்றதன் அருகில் வரும்போது பூமியில் உண்டாக்கும் மாற்றங்களையும், அதனால் உண்டான விளைவுகள் என எல்லாவற்றையும் விவரமாகவும், விளக்கமாயும் பதிந்து வைத்தனர்.

இந்த வகையில் ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் ஒவ்வொரு கோளும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் குறித்து வைத்து பின்னர் அவனுடைய வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களுக்கும், இந்த கோள்களின் நகர்வுகளுக்கும் தொடர்பு படுத்திய ஒரு முயற்சிதான் ஜோதிடம் என்பதன் ஆரம்பமாய் இருந்திருக்க வேண்டும்.பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த இந்த கணிப்புகள், கால ஓட்டத்தில் மெருகேற்றப் பட்டு இன்ன நிலையில் கோள்கள் அமைவதால் இன்ன பலன் உண்டாகும் என்பதாக ஒரு வரையறைக்குள் கொண்டு வரப் பட்டிருக்க வேண்டும்.

இன்னும் எளிமையாக சொல்வதானால் சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒன்பது கோள்களும் ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் எந்த நிலையில் உள்ளது என்று கணக்கிடுவதன் மூலம் அந்த மனிதனின் சென்ற காலம்,நிகழ் காலம்,வரும் காலம், என்ற மூன்று காலங்களையும் கணக்கிடுதல். இதுவே சோதிடத்தின் அடிப்படை. துனைக் கண்டத்தின் ஜோதிட முறைக்கு பொதுவில் இந்திய வண்ணம் பூசப் பட்டாலும், இந்த இயலில் தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது என்பதை இந்த இடத்தில் பதிந்து வைக்க விரும்புகிறேன். அதை நுணுகி ஆய்வதே இந்த பதிவின் நோக்கமாக இருக்கும்.

இனிவரும் பதிவுகளில் பண்டைத் தமிழரின் ஜோதிட கட்டமைப்பினையும், அதன் கூறுகளைப் பற்றி நானறிந்த வகையில் விளக்கிட முயற்சிக்கிறேன்...


24 October 2010

இனிய துவக்கம்!

தமிழர்களின் அரிய கலைகளில் ஒன்றான சோதிடக் கலையில் சித்தர்களின் பங்களிப்பு மகத்தானது. இந்த் கலையினை வெறுமனே மூட நம்பிக்கை என்று புறந்தள்ளாது இதன் நீள அகலங்களில் பயணித்தால் ஆச்சர்யங்கள் பலவற்றை தன்னுள்ளே பதுக்கி வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.

என்னிடம் இருக்கும் பல சோதிட புத்தகங்கள் நூற்றாண்டு கண்டவை, அவற்றை பிரதியெடுக்கும் ஒரு முயற்சியாகவும் கருதி இந்த பதிவினை துவக்கியிருக்கிறேன். காலத்தே மறைந்து கொண்டிருக்கும் சோதிடத் தகவல்களை இம்மாதிரியான ஊடகங்களில் பத்திரப் படுத்துவதன் மூலம், மேலதிக ஆய்வுகளுக்கு வாய்ப்புகள் உருவாவதுடன், எதிர்கால தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் ஒரு வேலையினை செய்தது போலாகும்.

இந்த பதிவின் வெற்றி அல்லது பயனாக்கம் இதை பயன்படுத்திடும் உங்களிடமே உள்ளது. எனவே உங்களின் மேலான ஆலோசனைகளும், அறிவுறுத்தல்களும் இந்தப் பதிவினை சிற்க்கச் செய்யும் என நம்புகிறேன்.

உங்களின் ஆதரவோடு, எல்லாவற்றிற்கும் மேலான எனது குருநாதரின் அருளையும், ஆசியையும் வேண்டி வணங்கி இந்த பதிவினை துவங்குகிறேன்.


என்றும் நட்புடன்

தோழி